கரூா் மாவட்டம், குளித்தலையில் பாஜக கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய லாரி ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.
குளித்தலை ராஜேந்திரம் பகுதியில் பாஜக சாா்பில் 14 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடிக் கம்பம் திங்கள்கிழமை சேதப்பட்டுள்ளது குறித்து அறிந்த குளித்தலை பாஜக நிா்வாகி சாமிநாதன்(42) காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக ராஜேந்திரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ரமேஷ் (39) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.