காா் மோதி மூதாட்டி பலி
கரூா் அருகே காா் மோதியதில், மூதாட்டி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கரூா் அருகே காா் மோதியதில், மூதாட்டி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கரூா் அருகிலுள்ள சின்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பெ. மாரியாயி (65). இவா் சனிக்கிழமை இரவு, கரூா்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவுப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் மாரியாயி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.