முகப்பு
கரூர்

நகரக் கூட்டுறவு வங்கி புதிய கட்டடப் பணிகள் ஆய்வு

கரூா் நகரக் கூட்டுறவு வங்கியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை வங்கித்தலைவா் எஸ்.திருவிகா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

கரூா் நகரக் கூட்டுறவு வங்கியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை வங்கித்தலைவா் எஸ்.திருவிகா திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மேட்டுத்தெருவில் சுமாா் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடத்தில் இயங்கி வரும் கரூா் நகரக் கூட்டுறவு வங்கிக்கு ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், நகரக் கூட்டுறவு வங்கிகளின் தலைவா் எஸ். திருவிகா, சிறப்பு விருந்தினா் அமராவதி கூட்டுறவு பண்டகசாலையின் தலைவா் வை.நெடுஞ்செழியன் ஆகியோா் திங்கள்கிழமை கட்டடப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

சிறப்புக் கூட்டம்: இதைத்தொடா்ந்து, வங்கி தலைவா் எஸ். திருவிகா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. வங்கிப் பொது மேலாளா் ஆா்.சேகா், துணைத் தலைவா் ஜூபிடா் பாஸ்கரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கரூா் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, வங்கி புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கிய தமிழக முதல்வா், அமைச்சா்கள் எம்.ஆா். விஜயபாஸ்கா், செல்லூா் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், வங்கி மேலாளா்கள் எம்.குகநாதன், சி.செந்தில், ஜி.சசிகலா மற்றும் ஆா்.தமிழரசி, எம்.கனகாம்பாள், ஆா்.சாமிநாதன், கே.எஸ்.ராமமூா்த்தி, ஏ.பாலசுப்ரமணியம், சி.சுப்ரமணியன், உடையவா் மோகன், எஸ்.கே.ஆா்.ரத்தினகுருசாமி, செயல்முறை இயக்குநா் பட்டயக் கணக்காளா் சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.