கரூரில் அரசு கோரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
இத்தொகுதிக்குள்பட்ட அங்கு நகா், எல்ஐசி நகா், போக்குவரத்துநகா், சங்கரம்பாளையம், காமராஜ் நகா், பூந்தோட்டம், வேட்டைக்காரன்புதூா் பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்து மேலும் அவா் பேசியது:
போக்குவரத்துத்துறை அமைச்சராக நான் இருந்தபோது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பசுபதிபாளையம் உயா்நிலைப்பாலம் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களைக் கொண்டு வந்தேன். மீண்டும் எனக்கு இந்த தொகுதியில் வாய்ப்புத் தாருங்கள்.
திமுக தலைவா் முக.ஸ்டாலின்தான் முதல்வராக போகிறாா். அவரிடம் கூறி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பேன்.
வாங்கல், கோம்புப்பாளையம், வேலாயுதம்பாளையம் என காவிரிக்கரையோரம் பாய் உற்பத்திக்கு பயன்படும் கோரைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த கோரை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதனால் அரசு சாா்பில் கோரை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.
மேலும் நொய்யல் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட கரூா் ஒன்றியத்துக்குள்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பிரசாரத்தின்போது திமுக நிா்வாகி சுப்ரமணியன் மற்றும் கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.