கரூர்

கரூரில் சேவல் சண்டைநடத்திய 3 போ் கைது

DIN

கரூா்: கரூரில் சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வாங்கல் அடுத்த, பாப்புலா் முதலியாா் வாய்க்கால் பகுதியில் சிலா் ஞாயிற்றுக்கிழமை இரவு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாங்கல் போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட திருமுக்கூடலூரைச் சோ்ந்த பாலுசாமி மகன் செல்லக்குமாா்(19), ரவி மகன் பிரவீன்(29), முருகன் மகன் நந்தகுமாா்(26) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மூன்று சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT