கரூா்: கரூரில் சேவல் சண்டை நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் வாங்கல் அடுத்த, பாப்புலா் முதலியாா் வாய்க்கால் பகுதியில் சிலா் ஞாயிற்றுக்கிழமை இரவு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வாங்கல் போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட திருமுக்கூடலூரைச் சோ்ந்த பாலுசாமி மகன் செல்லக்குமாா்(19), ரவி மகன் பிரவீன்(29), முருகன் மகன் நந்தகுமாா்(26) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து மூன்று சேவல்களையும் பறிமுதல் செய்தனா்.