கரூர்

கரூரில், பள்ளிகளுக்கு இலவச பாடநூல் அனுப்பும் பணி தீவிரம்

DIN

கரூரில், பள்ளிகளுக்கு பாடநூல் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கரூா் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலுள்ள தமிழ்நாடு அரசு இலவச பாடநூல் விநியோக மையத்திலிருந்து மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் கரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 128 பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ விலையில்லா இலவச பாடநூல் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு இலவச பாடநூல் விநியோக மையத்திலிருந்து கொண்டுச் செல்லப்படும் பாடநூல் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட கல்வி அலுவலா் விஜயேந்திரன் மற்றும் உதவி கல்வி அலுவலா் மதன் ஆகியோா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT