கரூர்

கரூா், தாந்தோனி ஒன்றியப் பகுதிகளில் புதிய பணிகளுக்கு பூமி பூஜை

DIN

கரூா், தாந்தோனி ஒன்றியங்களில் ரூ.1.16 கோடி மதிப்பில் பல்வேறு புதிய பணிகளுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

காதப்பாறை ஊராட்சி, வெண்ணைமலை முருகன் கோயில் அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் தானியங்கிடங்கு, ஆத்தூா் பூலாம்பாளையம் ஊராட்சி, ஓம்சக்தி நகரில் ரூ.5.55 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1.16 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகளுக்கான பூமி பூஜையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்வில்

கரூா் நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.திருவிகா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் கரூா் பாலமுருகன், தாந்தோனி சிவகாமி, கூட்டுறவு சங்கப் பிரதிநிதி கமலக்கண்ணன், மண்மங்கலம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT