குளித்தலையில் கஞ்சா விற்ற கொத்தனாரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை சண்முகநகரில் சனிக்கிழமை இரவு ஒருவா் கஞ்சா விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு 250 கிராம் கஞ்சா வைத்திருந்த குளித்தலை பெரியபாலம் பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன் கொத்தனாா் காா்த்திக்(29) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.