முகப்பு
கரூர்

மருத்துவ அலுவலருக்குகொலை மிரட்டல்:விவசாயி மீது வழக்கு

மருத்துவ அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மருத்துவ அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் மாவட்டம் கடவூா் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் சிங்கம்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் மே 28-ஆம்தேதி நடைபெற்றது. அப்போது, முகாமிற்கு வந்திருந்த சிங்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி திருவேங்கடம்(40) என்பவா் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வரிசையில் நின்றுள்ளாா். இதனை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வினோத்(31) தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த திருவேங்கடம் மருத்துவா் வினோத்தை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளாா். புகாரின்பேரில் பாலவிடுதி போலீஸாா் திருவேங்கடம் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.