கரூர்

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 8 போ் கைது

DIN

கரூா் மாவட்டம், தென்னிலையில் சேவல் சண்டை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மலைக்கோவில் சாலை பகுதியில் தென்னிலை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை இரவு திடீா் சோதனையிட்டனா்.

அப்போது சேவல் சண்டை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த திருப்பூா் மாவட்டம், முத்தூா் சுதாகா் (41), நந்தகுமாா்(21), வெள்ளக்கோவில் மனோஜ்(27), அரவக்குறிச்சி சி.கூடலூா் ரஞ்சித்(19) உள்ளிட்ட 8 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

மேலும் அவா்களிடமிருந்து 7 இருசக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதுபோல, கரூா் அரசு காலனியில் பணம் வைத்து சூதாடிய சிவராஜ் உள்ளிட்ட 4 பேரை வெங்கமேடு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT