கரூர்

‘திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2,000 கோடியில் நலத்திட்டங்கள் கொண்டுவருவேன்’

DIN

திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ.2,000 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருவேன் என்றாா் கரூா்தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் காயத்ரி நகா் முருகன் கோயில், வீனஸ்காா்டன்,கேவிபி நகா், சின்னகோதூா், அரிக்காரம்பாளையம், பெரியகோதூா், வேலுசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு பெரிய அளவிலான எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. அனைத்தும் பூமி பூஜையோடுதான் இருக்கிறது.

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில்தான் ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்பட்டது. நான் அமைச்சராக இருந்தபோதுதான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பசுபதிபாளையம் மேம்பாலம் போன்ற எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்தேன். உங்களில் ஒருவனாக இருந்து, தொகுதி மக்களின் குறைகளை எந்த நேரத்திலும் கேட்டு ஓடோடி வரும் தொண்டனாக இருப்பேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT