கரூர்

பறக்கும் படையினா் சோதனையில் 34 கிலோ குட்கா பறிமுதல்

DIN

கரூரில் பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் 34 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும்படை அலுவலா் அமுதா தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை இரவு வாங்கல் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த மொபெட்டை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அவா்கள் வைத்திருந்த மூட்டையில் 34 கிலோ புகையிலைப் பொருள்கள் அடங்கிய குட்கா மூட்டை இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வாங்கல் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினா் புகையிலைப் பொருள்களை கைப்பற்றி, வாங்கல் செக்கு மேட்டுத்தெரு பாலசுப்ரமணியன்(39), மோகன்ராஜ்(47) ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT