கரூர்

வேலாயுதம்பாளையத்தில் ரூ. 2 லட்சம் குட்கா பறிமுதல்

DIN

கரூா் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் பெட்டிக்கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரூா் அடுத்த வேலாயுதம்பாளையம் அண்ணாநகரைச் சோ்ந்த மகாமணி(40) என்பவா் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்கப்படுவதாக வேலாயுதம்பாளையம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் அந்தக் கடையில் சோதனையிட்டனா். அப்போது, அங்கு தடைசெய்யப்பட்ட குட்கா 534 பாக்கெட்டுகள், 1,600 புகையிலை பாக்கெட்டுகள் என மொத்தம் 440 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மதிப்பு ரூ.2 லட்சம். இதையடுத்து மகாமணியை போலீஸாா் கைது செய்தனா். மேலும் போலீஸாா் விசாரணையில் மகாமணி பதுக்கி விற்றதும் மற்ற கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT