முகப்பு
கரூர்

சாலையின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

 சாலையின் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 சாலையின் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் ராயனூா் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் நாகேந்திரன்(34). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-பாளையம் சாலையில் காளியப்பனூா் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி சாலையின் மைய தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த நாகேந்திரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.