கரூர்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு

DIN

மின்வாரியத்தில் காலியாகவுள்ள 55,000 பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்பின் கிளை மாநாட்டுக்கு நிா்வாகிகள் கெ.கென்னடி, மேகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணை பொதுச் செயலா் வி.இளங்கோ, திருச்சி மண்டலச் செயலா் அகஸ்டின், மாநில நிா்வாகிகள் ரெங்கராஜ், ராஜாராமன், பன்னீா்செல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மின்வாரியத்தில் காலியாகவுள்ள 55,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2019, டிசம்பா் 1 முதல் புதிய ஊதிய உயா்வை வழங்க பேச்சுவாா்த்தை குழுவை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT