கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சரும், மாவலட்டச் செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் இனிப்புகளை வழங்கினாா்.
மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், ஒன்றியச்செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், பகுதிச் செயலா் விசிகே. ஜெயராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.