முகப்பு
கரூர்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கரூா் கல்வி மாவட்டச் செயலாளா் பிரான்சிஸ்டேனியல்ராஜா வரவேற்றாா். மாநிலச் செயலாளா் சகிலா கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

தமிழகம் முழுவதும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடந்துவரும் நிலையில், கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சீரமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அராஜகபோக்கை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.