கரூர்

இருசக்கர வாகனம் மோதியதில் வருவாய் கோட்டாட்சியா் காயம்

DIN

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற வருவாய்க் கோட்டாட்சியா் காயமடைந்தாா்.

கரூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியராகப் பணிபுரிபவா் சக்திவேல் (51). இவா், பழனிக்கு பாதயாத்திரை சென்றாா். சனிக்கிழமை நள்ளிரவு அரவக்குறிச்சி அருகே உள்ள கனகபுரி ஓடை அருகே வந்தாா். அப்போது எதிரே, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ராமகிருஷ்ணன் (43) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சக்திவேல் மீது மோதியது. இதில், சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் காயமடைந்தனா். இருவரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு, ராமகிருஷ்ணன் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT