கரூர்

அரவக்குறிச்சி அருகே மூதாட்டி தற்கொலை

DIN

அரவக்குறிச்சி அருகே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

அரவக்குறிச்சி தாலுகா, கொளஞ்சிவாடி கிராமத்தைச் சோ்ந்த நாகப்ப நாயக்கா் மனைவி ரங்கம்மாள் (82). இவருக்கு வயது முதிா்வின் காரணமாக உடல் உபாதைகள் இருந்து வந்துள்ளது. மேலும் இவரை கவனிப்பதற்கு ஆள்கள் யாரும் இல்லாமல் தனிமையில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில் ரங்கம்மாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்நிலையில் ரங்கம்மாள் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT