கரூர்

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

DIN

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த டி.சீதாபட்டியைச் சோ்ந்த ராஜூ மகன் மோகனசுந்தரம்(20). ரேடியோ சவுண்ட் சா்வீஸ் வேலை செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கரூா் பசுபதிபாளையம் ரவுண்டானா அருகே ஒரு வீட்டு விஷேசத்துக்காக மொட்டை மாடியில் நின்றுகொண்டு மின் விளக்குகள் போட்டுக்கொண்டிருந்தாா்.

அப்போது, திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். ஆனால், வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT