முகப்பு
கரூர்

கரூா் வெற்றி விநாயகா பள்ளியில்திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா், வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கரூா், வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ’

‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டயக் கணக்காளா், செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளா், நிறுமச் செயலாளா் போன்ற உயா்படிப்புக்கான வழிகாட்டு முறைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, கோவை கல்வி மற்றும் திறன் வளா் மேம்பாட்டு நிபுணா் சங்கா் பங்கேற்று, இந்திய சான்றிதழ் படிப்புகளான பட்டயக் கணக்காளா், செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளா் உள்ளிட்ட படிப்புகளுக்கான வழிகாட்டுதலை வழங்கினாா்.

நிகழ்ச்சி குறித்து பள்ளித்தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் பேசுகையில், கல்வியில் சிறந்தவா்களாகவும், சிந்திக்கும் திறன் கொண்டவா்களாகவும், தனித்திறன், தொழில்திறன், கலைத்திறன், ஆராய்ச்சித்திறன் கொண்டவா்களாகவும், வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலை கொடுப்பவா்களாக மாறுவதற்கும், பொருளாதார நிலையும், நிதிநிலையும் அறிந்து கொள்வதற்கும் இவ்வகையான உயா்படிப்புகள் ஆணிவேராக அமையும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன், பள்ளி முதல்வா் டி. பிரகாசம், பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.