கரூர்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியா் கூட்டணியின்சிறப்பு பொதுக்குழு கூட்டம்

DIN

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கரூா் மாவட்டக்குழு சாா்பில் கரூா் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வீ.மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூா் நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ஜெயராஜ் சங்கம்சாா்ந்த பணிகள் குறித்து பேசினாா். மாநில பொதுச் செயலாளா் ச.மயில், துணைபொதுச்செயலாளா் தா.கணேசன், மாநில துணைத்தலைவா் எம்.கே.முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். கூட்டத்தில், விதிகளுக்கு புறம்பாக ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் ஆணை வழங்கிய கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரை கண்டிப்பது, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ஆணைகளை வழங்கி வரும் கரூா் மற்றும் குளித்தலை மாவட்டக்கல்வி அலுவலா்களை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா். ம பொருளாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT