இருசக்கர வாகனம் மீது காா் மோதி விவசாயி சாவு
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.
இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி இறந்தாா்.
கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த காருடையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (38), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு கோவை-கரூா் சாலையில் தென்னிலை 4 ரோடு பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதி இறந்தாா். இதுகுறித்து தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், மோகனூா் அடுத்த ராசிபாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணியம் (58) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.