கரூர்

‘மனித சமுதாயத்தை மட்டுமின்றி பறவைகள், புழு, பூச்சி இனங்களை காப்பாற்றவது மரங்கள்தான்’

DIN

மனித சமுதாயத்தை மட்டுமின்றி பறவைகள், புழு பூச்சி இனங்களை காப்பாற்றக்கூடியவை மரங்கள் என்றாா் மாவட்ட வன அலுவலா் வி.ஏ. சரவணன்.

கரூா் வெண்ணைமலை சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சாரண, சாரணியா் இயக்கம் சாா்பில் சா்வதேச அமைதி தினம் மற்றும் விதை பந்து வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.கீதா தலைமை வகித்தாா். சேரன் பள்ளி சாரண, சாரணியா்களால் தயாரிக்கப்பட்ட 10,000 விதைப்பந்துகளையும், மரக்கன்றுகளையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் என்.கீதா மற்றும் மாவட்ட வன அலுவலா் வி.ஏ.சரவணன் ஆகியோரிடம் வழங்கினா்.

விழாவில், மாவட்ட வன அலுவலா் வி.ஏ.சரவணன் பேசுகையில், மனித குலம் தழைத்தோங்க, ஒவ்வொருவருக்கும் மனித நேயம் கட்டாயம் இருக்க வேண்டும். தனி மனிதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. ஒட்டு மொத்த சமுதாயத்தின் செயல்பாடுகளாலே சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் வனப்பரப்பு குறைவாக உள்ளது. வனத்தை அதிகரித்தால்தான் போதிய மழை கிடைக்கும். இதனால்தான் மரங்களை அதிகளவில் நட வேண்டும் என அரசு கூறுகிறது. ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு மரத்தையாவது நட்டு பராமரிக்க வேண்டும். நாம் வாழக்கூடிய இடங்களில் இயற்கைக்கு உகந்த மரங்களை அதிகளவில் நடவேண்டும். மரங்கள் நடுவதால், மனித சமுதாயத்தை மட்டுமின்றி பறவைகளையும், புழு, பூச்சி இனங்களையும் காப்பாற்ற முடியும். அதிக மரங்களை அதிகளவில் நட்டு பசுமைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, சேரன் பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். பள்ளித்தாளாளா் எம்.பாண்டியன் சிறப்புரையாற்றினாா். இதில், கரூா் மாவட்ட பசுமைப்பட ஒருங்கிணைப்பாளா் எஸ்.வேலுசாமி, மாவட்ட சாரண, சாரணியா் பொறுப்பாளா்கள் முத்துச்சாமி, சாந்தி, முதன்மைக்கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் முருகேசன், ஆசிரியைகள் திலகவதி, உஷா மற்றும் பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மாவட்ட சாரண, சாரணியா் இயக்க மாவட்டச் செயலாளா் ரவிசங்கா் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT