கரூர்

கரூா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில்26 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

DIN

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் த. பிரபுசங்கா் வழங்கினாா்.

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மக்கள்குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்,

ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் என மொத்தம் 527 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 4 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா், 3 பேருக்கு காதொலிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் 26 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.

நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், திட்ட இயக்குநா்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளா்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிா் திட்டம்) தனித்துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலா் காமாட்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT