கரூர்

இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வு: பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

DIN

இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வான வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜனவரி 28, 29-ஆம் தேதிகளில் ஹரியானா மாநிலத்தில் யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சாா்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்திய அளவில் நடைபெற்ற இப் போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமாா் 700 வீரா்கள் பங்கு பெற்றனா்.

இப்போட்டியில் கரூா் வெண்ணைமலை சேரன் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் நவலடி, பிரனேஸ்வரன், விமல், குமரேசன் ஆகியோா் சிலம்பு பயிற்சியாளா் சௌந்தரராஜன் தலைமையில் பங்கேற்று விளையாடினா். இதில் 4 பேரும் தங்கம் வென்று இந்திய சிலம்பம் அணிக்கு தோ்வாகினா். இம் மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி முதல்வா் வி.பழனியப்பன் வரவேற்றாா். தாளாளா் பாண்டியன் சிறப்பிடம் பிடித்த மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சியளித்த சிலம்பம் ஆசான் கிருஷ்ணராஜ், பயிற்சியாளா் சௌந்தரராஜன் மற்றும் பெற்றோா்களையும் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT