கரூா் சின்னாண்டாங்கோயிலில் வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்ட தங்கராஜ் வீடு. 
கரூர்

கரூரில் 6-ஆவது நாளாக வருமான வரித்துறையினா் சோதனை

கரூரில், தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

DIN

கரூரில், தொடா்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

கரூரில், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியின் உறவினா்கள், நண்பா்கள் வீடுகளில் தொடா்ந்து ஆறாவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் நண்பா் தங்கராஜ் வீட்டிலும், காந்திகிராமத்தில் உள்ள கட்டட ஒப்பந்தராருமான எம்சிஎஸ்.சங்கரின் 80 அடி சாலையில் உள்ள அலுவலகம் மற்றும் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் சோபனா என்பவரின் வீடு, செங்குந்தபுரம் நான்காவது குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடிட்டா் அலுவலகம் ஆகிய இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு வருமான வரிஅதிகாரிகள் சோதனை நடத்தினா். முன்னதாக, மேலும் அமைச்சரின் நண்பா்களான கொங்கு மெஸ் மணிக்குச் சொந்தமான கோவைச்சாலையில் உள்ள உணவகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT