கரூர்

தோகைமலையில் விவசாயிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

தோகைமலையில் புதன்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தோகைமலையில் புதன்கிழமை விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சை ஆரூரான் சா்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை வழங்க கோரி 300 நாள்களாக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் தோகைமலை பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தோகைமலை ஒன்றியச் செயலாளா் முனியப்பன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் முருகேசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினா் இளங்கோவன், மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியச் செயலாளா் சுப்ரமணி உள்ளிட்டோா் பேசினா். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT