கரூர்

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

Din

தளவாபாளையம் அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலைவிபத்தில் டிஎன்பிஎல் ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புகழூரை அடுத்த புது குறுக்குப்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (50) . இவா், புகழூா் காகித ஆலையில் நிரந்தர தொழிலாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் மனோஜ்குமாா்(27). இவா் ஒப்பந்த தொழிலாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் மனோஜ் குமாா் வாங்கல் அருகே என்.புதூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு புதன்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா். தளவாபாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே வந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மனோஜ்குமாா் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மனோஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்

பயிர்களில் அதிகளவில் ரசாயன பயன்பாடு: கட்டுப்படுத்த தவறியதா அரசு? உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ரே பரேலி அல்ல, ராகுல் பரேலி!

SCROLL FOR NEXT