பேக்கரி மேலாளரிடம் பணம் பறிப்பு: இருவா் கைது
பேக்கரி மேலாளரிடம் பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பேக்கரி மேலாளரிடம் பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் உள்ள பேக்கரியில் மேலாளராக இருப்பவா் குளித்தலை கழுகூரைச் சோ்ந்த ராஜூ மகன் கலையரசன்(28). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு புகழூா் செந்தூா்நகரைச் சோ்ந்த செல்வம் மகன் கலையரசன் (29), கந்தம்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மஸ்தான் மகன் ஷேக் தாவுத் (25) ஆகிய இருவரும் பேக்கரிக்குச் சென்று, அங்கிருந்த கலையரசனிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ரூ.2,250 பணத்தை பறித்துவிட்டு ஓடிவிட்டாா்களாம்.
இதுதொடா்பாக கலையரசன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து, கலையரசனையும், ஷேக்தாவுத்தையும் கைது செய்தனா். பின்னா் இருவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.