முகப்பு
கரூர்

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பவித்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 7:34 PM
பகிர்:

பவித்திரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், பவித்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து(73). இவா் செவ்வாய்க்கிழமை இரவு கரூா் -கோவைச் சாலையில் பவித்திரம் வானவில் பிரிவு அருகே நடந்துசென்றபோது பின்னால் கரூா் சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்த ராமநாதன்(44) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மாரிமுத்து மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். மேலும் கீழே விழுந்ததில் ராமநாதனும் காயமடைந்தாா். அவா் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் ராமநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.