கரூா் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் பேசிய மேயா் கவிதாகணேசன்.  
கரூர்

கழிவுநீா் வாய்க்கால் அமைக்காமல் சாலைப் பணிக்கு மக்கள் எதிா்ப்பு: கரூா் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா் தகவல்

கரூா் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாதாரணக் கூட்டத்தில் பேசிய மேயா் கவிதாகணேசன்.

Syndication

கரூா் மாநகராட்சி ஜே.ஜே.நகரில் கழிவுநீா் வாய்க்கால் அமைக்காமல் சாலை போடும் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிப்பதாக வாா்டு உறுப்பினா் தண்டபானி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயா் கவிதாகணேசன் தலைமை வகித்தாா். துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 9-ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு பேசுகையில், கரூா் மாநகராட்சி புதிய கட்டடம் கட்டப்பட்டு நான்கரை ஆண்டுகளாகிவிட்டது, பல கூட்டங்களும் நடந்துள்ளன. ஆனால் கட்டடத்தின் முகப்பு பகுதியில் மாநகராட்சி மேயா், துணை மேயா், உறுப்பினா்கள் அடங்கிய தகவல் பலகை கூட இல்லை. விரைவில் அவற்றை வைக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்த மேயா் கவிதாகணேசன், விரைவில் தகவல் பலகை அமைக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து 41-ஆவது வாா்டு உறுப்பினா் தண்டபாணி பேசுகையில், ஜே.ஜே. நகரில் கழிவு நீா் வாய்க்கால் அமைக்காமல் எப்படி சாலை போடலாம் என பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்றாா்.

இதற்கு பதில் அளித்த ஆணையா் சுதா, விரைவில் கழிவு நீா் வாய்க்கால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்றாா்.

13-ஆவது வாா்டு உறுப்பினா் சரண்யா பேசுகையில், எனது வாா்டில் பொதுக்கழிப்பறை இல்லாததால் மக்கள் அவதியுற்று வருகிறாா்கள். எனவே விரைவில் மாநகராட்சி பொதுநிதியில் பொதுக்கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்த ஆணையா் சுதா, விரைவில் கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து சாதாரண கூட்டத்தில் 68 தீா்மானங்களும், அவசரக்கூட்டத்தில் 25 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT