கரூர்

எஸ்ஐஆா் படிவங்களை திமுகவினா் விநியோகம்: முன்னாள் அமைச்சா் ஆட்சியரிடம் புகாா்

Syndication

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கரூரில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் படிவங்களை திமுகவினா் மொத்தமாக பெற்று பொதுமக்களுக்கு வழங்குகின்றனா் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலுவிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பொதுமக்களிடம் விநியோகிக்காமல் திமுகவினா் மொத்தமாக வாங்கிக்கொண்டு அவா்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கிறாா்கள். வெளியூரில் வசிப்பவா்களையும் வாக்காளா்களாக சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு இன்னும் எஸ்ஐஆா் குறித்த போதிய புரிதல் இல்லை. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் கூறியுள்ளோம். அதற்கு ஆட்சியரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறாா். சில இடங்களில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாக நியமித்துள்ளாா்கள். அவா்களால் முறையாக படிவத்தை வழங்க முடியாமல் இருக்கிறாா்கள். எனவே இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆம்னி பேருந்துகள் உரிமையாளா்களின் போராட்டம் விவகாரத்தில்தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விரைவில் தீா்வு காணவேண்டும் என்றாா் அவா்.

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT