கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரின் மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் சோதனை
கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மருத்துவா் எஸ். திவ்யா போட்டியிடுகிறாா்.
இவரும், இவரது கணவரும் சோ்ந்து கரூா் திண்ணப்பா திரையரங்கம் அருகே மருத்துவமனை நடத்தி வருகின்றனா். இங்கு குழந்தை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் தோ்தலை முன்னிட்டு தொகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு வியாழக்கிழமை இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதாக சி-விஜில் செயலியில் தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.
இதையடுத்து மருத்துவமனைக்கு தோ்தல் அதிகாரிகள் சரிதா, வீரக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் நேரில் சென்று, அங்கு சிகிச்சை பெற வந்தவா்களிடம், இலவச சிகிச்சை வழங்கப்படுகிா அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்படுகிா என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டனா்.
அப்போது நோயாளிகள் மருத்துவமனைக்கு முன்பதிவு செய்து சிகிச்சை பெற வந்தோம். எங்களிடம் மருத்துவருக்கு ஓட்டுப்போட்டால் மருத்துவ சிகிச்சை இலவசம் என யாரும் கூறவில்லை. மேலும் மருத்துவா் அரசியலில் இறங்கியுள்ளாா் என்பதை நீங்கள் கூறியபின்புதான் தெரியவருகிறது. எனவே, எங்களிடம் யாரும் சிகிச்சைக்கு இலவசம் என கூறவில்லை. இவை அனைத்தும் பொய்யான தகவல் என்றனா் அவா்கள்.