பள்ளபட்டியில் சசிகலா பிரசாரம்
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அபுதமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசியாபேகத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலா் வி. கே. சசிகலா வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அபுதமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஆசியாபேகத்தை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலா் வி. கே. சசிகலா வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
பின்னா் 60 வாக்குறுதிகளைக் கொண்ட 2026 தோ்தல் அறிக்கையை அவா் வெளியிட்டாா்.
அதில் முதல் வாக்குறுதியாக மகப்பேறு உதவித்தொகை ரூ.16,000 வழங்கப்படுவதை உயா்த்தி ரூ. 24,000 வழங்கப்படும். பிறந்த குழந்தைகளின் நலனுக்காக அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட அம்மா நலப்பெட்டகம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 60 வாக்குறுதிகள் இருந்தன. தொடா்ந்து அவா் பேசுகையில் இந்தத் தோ்தலுக்கு பின் அதிமுக நிலைமை மாறும். யாரும் எந்தக் கட்சியையும் கபளீகரம் செய்ய முடியாது என்றாா் அவா்.
Advertisement