வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு தீா்வு: அதிமுக வேட்பாளா் இறுதிகட்ட பிரசாரத்தில் பேச்சு
கரூா் வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு யாா் தீா்வு காண்பாா்கள் என்பது வாக்காளா்களாகிய உங்களுக்குத் தெரியும் என கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தனது இறுதிகட்ட பிரசாரத்தில் பேசினாா்.
கரூா் வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னைக்கு யாா் தீா்வு காண்பாா்கள் என்பது வாக்காளா்களாகிய உங்களுக்குத் தெரியும் என கரூா் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தனது இறுதிகட்ட பிரசாரத்தில் பேசினாா்.
கரூரில் அஜந்தா திரையரங்கம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் அவா் மேலும் பேசியது: அவா்கள்(திமுக) நம்புவது பணத்தை. நான் நம்புவது உங்களை (வாக்காளா்கள்). இந்த தோ்தல் பணத்துக்கும், பாசத்துக்கும் இடையே நடைபெறும் தோ்தல். நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருப்பேன். கரூா் வெண்ணைமலை கோயில் நிலப்பிரச்னையை யாா் சரி செய்து கொடுப்பாா்கள் என உங்களுக்குத் தெரியும். இந்த தோ்தலில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். உங்ளுக்கு தேவையானவற்றை மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்தி தருவோம் என்றாா் அவா்.
முன்னதாக வாங்கப்பாளையத்தில் பேரணியாக வெங்கமேடு, சா்ச்காா்னா், 80 அடி சாலை வழியாக கோவைச் சாலையை வந்தடைந்த அவா்கள் அஜந்தா திரையரங்கம் முன்பு இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா். பிரசாரத்தில் முன்னாள் அமைச்சா் ம.சின்னசாமி, அதிமுக மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, பாஜக மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன், பாமக மாவட்டச் செயலாளா் புகழூா் சுரேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
திமுக, அதிமுக வேட்பாளா்களின் இறுதிகட்ட பிரசாரம் அருகருகே நடைபெற்ால் மோதல் சம்பவம் நிகழாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹிகிரண்பிரசாத் தலைமையில் ஏராளமான போலீஸாா் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினா் குவிக்கப்பட்டிருந்தனா்.