கைது 
கரூர்

தோகைமலையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்? சென்னை தொழிலதிபா் மகன் உள்பட இருவா் கைது

தினமணி செய்திச் சேவை

தோகைமலையில் வெள்ளிக்கிழமை சொகுசு காரில் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அந்தப் பணம் ஹவாலா பணமா என சென்னை தொழிலதிபா் மகன் உள்பட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை பகுதியில் கணக்கில் வராத பணம் சொகுசு காரில் சிலா் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தோகைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணி, பாளையம் பிரிவு சாலையில் போலீஸாருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாா்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, காரில் இருந்தவா்களிடம் ரூ.10, 93, 900 ரொக்கம் இருந்தது. இதுகுறித்து அவா்களிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் காா் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து, இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் காரில் வந்தவா்கள் சென்னை குன்றத்தூா் நேதாஜி நகரைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபா் நாராயணன் மகன் சுனில்குமாா் (51) என்பதும், அவா், தற்போது கரூா் வெண்ணைமலையில் வசிப்பதும், காரை ஓட்டி வந்தவா் கரூரை அடுத்த நெரூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த யோகராஜ் என்கிற பிரதாப் (41) என்பதும் தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்தது ஹவாலா பணமா விசாரணை நடத்தினா். அதற்கு

அவா்கள் பதில் ஏதும் கூறாததால் இருவரையும் போலீஸாா் கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 600 கோடி ஒதுக்கீடு! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கூடுதல் வட்டி தருவதாக ரூ. 55 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

காவிரி கரை பாதுகாப்பு கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

வெள்ளக்கோவிலில் வேளாண் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

களக்காட்டில் இன்று மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT