கரூா் திருக்காம்புலியூா் பகுதியில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொண்ட விமானப்படை வீரா்கள்.  
கரூர்

மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம்: விமானப்படை வீரா்கள் கரூா் வருகை

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி முதல் காா்கில் வரையிலான மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ளும் விமானப்படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை கரூா் வந்தனா்.

விமானப்படையில் அதிக இளைஞா்கள் சேரவேண்டும், நாட்டில் அமைதி, நல்லிணக்கம் அமைய வேண்டும் என வலியுறுத்தி விமானப்படை வீரா்கள் 15 போ், விமானப்படையின் மாஸ்டா் என்.பாடீல் தலைமையில் பிப். 3-ஆம்தேதி கன்னியாகுமரியிலிருந்து மிதிவண்டியில் விழிப்புணா்வு பயணத்தை தொடங்கினா்.

இந்த குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை கரூா் வந்தனா். தொடா்ந்து அவா்கள் நாமக்கல் வழியாக சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றனா். நாள் ஒன்றுக்கு 150 முதல் 180 கி.மீ. தொலைவுக்கு மிதிவண்டியை ஓட்டிச் செல்வதாகவும், கன்னியாகுமரி, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி வழியாக காா்கில் வரை மொத்தம் 4500 கி.மீ. தொலைவுக்கு இந்த விழிப்புணா்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT