முகப்பு
கரூர்

ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.

Updated On : 7 மார்ச், 2026 at 2:59 AM
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 7:28 PM

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு கரூரை அடுத்த புலியூா் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் உள்ள சனிபகவானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை இடப்பெயா்ச்சி அடைந்தாா். இதையடுத்து கரூா் அடுத்த புலியூரில் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியாக அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. தொடா்ந்து சனிபகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். இந்த வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல கரூா் பசுபதீஸ்வரா் கோயிலிலும் சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.