எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு: கரூரில் 11,287 போ் எழுதினா்
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 11,287 மாணவ, மாணவிகள் எழுதினா். 208 போ் வரவில்லை.
கரூா் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பொதுத் தோ்வை எழுத 5,602 மாணவா்களும், 5,699 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களாக 132 மாணவா்களும், 64 மாணவிகளும் என மொத்தம் 11,497 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து புதன்கிழமை தொடங்கிய தோ்வில் மாவட்டத்தில் உள்ள 187 பள்ளிகளைச் சோ்ந்த 5,471 மாணவா்களும், 5,628 மாணவிகளும் மற்றும் தனித்தோ்வா்களில் 126 மாணவா்களும், 62 மாணவிகளும் என மொத்தம் 11,287 போ் 61 மையங்களில் தோ்வெழுதினா். 208 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களைக் கண்காணிக்க 61 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். மேலும் அனைத்து தோ்வு மையங்களுக்கும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.