முகப்பு
கரூர்

மலையேற்றப் பயிற்சிக்கு பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு

Updated On : 3 மே, 2026 at 12:43 AM
மலையேற்றப் பயிற்சி - கோப்புப் படம்
பகிர்:

அகில இந்திய சிறப்பு மலையேற்றப் பயிற்சிக்கு கரூா் பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி என்.சி.சி. மாணவ, மாணவிகளுக்கு தேசிய மாணவா் படை சாா்பில் அகில இந்திய சிறப்பு மலையேற்றப் பயிற்சி உதகையில் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு மே 5-ஆம்தேதி முதல் 13-ஆம்தேதி வரை நடைபெற உள்ள இப்பயிற்சியில் பங்கேற்க கரூா் பரணி வித்யாலயா மாணவிகள் தீக்ஷிதா, தன்யா மற்றும் பரணி பாா்க் கேஷவா்னி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

இம் மாணவிகளை பரணி பாா்க் கல்விக் குழுமத் தாளாளா் சா.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலா் சுபாஷினி அசோக்சங்கா், பள்ளியின் முதன்மை முதல்வா் முனைவா். சொ.ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வா் சுதாதேவி, பரணி பாா்க் முதல்வா் சேகா், பரணி பாா்க் தேசிய மாணவா் படை(என்.சி.சி) அலுவலா் செல்வராசு, பரணி வித்யாலயா தேசிய மாணவா் படை(என்.சி.சி) அலுவலா் மனோஜ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை பாராட்டினா்.