பெரம்பலூர்

மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

DIN

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில், மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளான ஆக. 20 ஆம் தேதி ஆண்டுதோறும் மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT