பெரம்பலூர்

தட்டுப்பாடில்லா குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

DIN

பெரம்பலூர் மாவட்டம், டி,களத்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி. களத்தூர் கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்து  வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். 
இதனால் பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் தட்டுப்பாடின்றி  முறையாக விநியோகம் செய்யக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த  மக்கள், டி.களத்தூர்- தேனூர் சாலையில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு  அளித்த உறுதியையடுத்து மறியலை கைவிட்டுச் சென்றனர். 
இதனால், அந்த வழித்தடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT