பெரம்பலூர்

பெரம்பலூரில் வழிப்பறி:  சேலம் பெண் கைது

DIN

பெரம்பலூர் அருகேயுள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மனைவி செல்வி (32). இவர், திங்கள்கிழமை காலை பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, செல்வி வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு பெண் ஒருவர் ஓடினார்.
 இதையறிந்த அங்கிருந்த பயணிகள் சிலர், தப்பியோடிய பெண்ணை பிடித்து பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மாவட்டம், அயோத்திபட்டினம் ராமர்கோயில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மனைவி ராணி (34) என்பது தெரியவந்தது. புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து ராணியை கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT