பெரம்பலூர்

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு  ஊதிய நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்

DIN

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்று  ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழு, மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவதில் வரையறை செய்திட வேண்டும்.  மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டன. 
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சு. தங்கவேலு தலைமை வகித்தார். பொருளாளர் அ. தங்கவேல் அறிக்கை வாசித்தார். ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள் சிவக்குமார் (தணிக்கை), பழனிசாமி, பாரதிதாசன்  சிறப்புரையாற்றினர்.  
சங்கத்தின்  மாநிலத்தலைவர் மணிவண்ணன், மண்டல துணைச்செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT