பெரம்பலூர்

குன்னம் அருகே இருவேறு சாலை விபத்துகளில் 7 பேர் காயம்

DIN


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் 7 பேர் காயமடைந்தனர்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள டி.வி. புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (48). இவர் தனது ஆட்டோவில் அகரம் சீகூரிலிருந்து கீழப்பெரம்பலூர் கிராமத்துக்கு 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தார். கருப்பட்டாங்குறிச்சி கிராமம் அருகே வந்தபோது, அவ்வழியே சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி மோதி ஆட்டோவில் பயணித்த ஓட்டுநர் வீரபாண்டியன், அமுதா (62), ஜெகதாம்பாள் (55), சோமு (65), வசந்தா (40) அம்சவள்ளி (50) ஆகியோர் காயமடைந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக்கை (32) கைது செய்து விசாரிக்கின்றனர்.
பால் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதல்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30).
இவர், குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பால் வேன் மோதி பலத்த காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் துறையூரை சேர்ந்த அமுதாஞ்சனை (29) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT