பெரம்பலூர்

சமரச சுத்த சன்மார்க்க சங்க ஆண்டு விழா

DIN

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் 83-ஆவது ஆண்டு விழா,  அருட்பிரகாச வள்ளலார் அவதார தின விழா வள்ளலார் மடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
விழாவுக்கு, சன்மார்க்க சங்கத்தின் மாவட்ட கெளரவத் தலைவர் வழக்குரைஞர் பிரசன்னம் தலைமை வகித்தார். 
வள்ளலார் ஜயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவருள்பா மற்றும் சன்மார்க்க கோட்பாடுகள் குறித்து பேச்சுப் போட்டி, திருவருள்பா பாடல்கள் ஒப்பித்தல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து, சன்மார்க்க சங்க மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சுந்தரராஜன் தலைமையில், சமுதாய சேவை அரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருச்சி பேராசிரியர் அமுதா ராமானுஜம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சன்மார்க்க சங்கத் தலைவர் சந்திரசேகர் வரவேற்றார். ஓய்வுபெற்ற ஆசிரியர் நடேச சுப்ரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT