முகப்பு
பெரம்பலூர்

தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு

பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:45 AM
பகிர்:

பெரம்பலூரில் தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்ட இயக்கப் பொறுப்பாளர்கள் நியமன தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அகில இந்தியச் செயலர் வ.அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில், பெரம்பலூர் கல்வி மாவட்டத் தலைவராக மு.துரைராஜ், செயலராக ஒய்.ஆர்.செல்வராஜ், பொருளாளராக பெ.கார்த்திகேயன், மகளிரணிச் செயலராக இரா.ராஜேஸ்வரி, துணைத்தலைவராக சே.ராஜ்குமார், துணைச் செயலராக த.முருகேசன், தணிக்கை குழு உறுப்பினராக ந.செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 
வேப்பூர் கல்வி மாவட்டத் தலைவராக சி.சுந்தராஜன், செயலராக ஆ.கருப்பையா, பொருளாளராக மா.செல்வக்குமார், மகளிரணிச் செயலராக த.ஜாய்ஸ் ஸ்டெல்லா ராணி, துணைத் தலைவராக வீ.மாரிமுத்து, துணைச் செயலராக மு.கோவிந்தராசு, தணிக்கைக்குழு உறுப்பினராக து.காமராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.