பெரம்பலூர்

ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

DIN


பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.எஸ். விவேகானந்தன், கல்லூரி முதல்வர் எம். சுபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரோட்டரி சங்கத்தை எம்.பிரபாகரன் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, 2018-19ஆம் ஆண்டுக்கான ரோட்ராக்ட் சங்கத் தலைவராக பி. பாரதி, செயலராக பி.கல்கியா ஆகியோர் பொறுப்பேற்று உறுதிமொழி ஏற்றனர். சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரி ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.சூர்யா, பேராசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக, மாணவி ஆர்.பாரதி வரவேற்றார். முடிவில் மாணவி பி.கல்கியா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT