பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை மருவத்தூர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளக்காநத்தம் கிராமத்தில் இளைஞர் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்தில் ஈடுபட்டபோது, கொளக்காநத்தம் பெருமாள் கோயில் அருகே பெரியசாமி மகன் செல்வம் (20) ,சீனிவாசன் மகன் தனசேகரன் (30), கணேசன் தங்கதுரை (36), சின்னதுரை மகன் அருண்குமார் (18) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.